Skip to main content

Posts

Showing posts from November 1, 2010

Puriyatha Pudhir

புரியாத புதிர் நான் ஒரு சென்னைவாசி.  அடிக்கடி இரு சக்கர வாகன பயணம். இதில் நான் ட்ராபிக் சிக்னலில் நிற்கும்போது என் கண் பார்வையில்  படுவது...        A .   சிகப்பு சிக்னலில் அனைத்து வாகனங்களும் நிற்கும்போது மிதிவண்டி ஓட்டுனர்கள்  மட்டும் சிக்னலை மதிக்காமல் சென்றுகொடிருப்பர். இதில் மிதிவண்டிகள் தவிர மோட்டார் வாகனங்கள் அறிந்தோ அறியாமலோ சிக்னலை மீறி செல்லும்போது போக்குவரத்து காவலர் பிடித்து அபராதம் போடும் சூழ்நிலையில் மிதிவண்டிகாரரை மட்டும்  கண்டுகொள்வதில்லை இது குறித்து எனக்கு விடை தெரிய வேண்டிய  வினாக்கள்:  மோட்டார் வாகனங்கள் விதி மீறி செல்லும்போது - மற்ற திசைகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு  இடையூறோ அல்லது விதி மீறும் வாகனத்திற்கு ஆபத்தோ ஏற்படும்போது மிதிவண்டி ஓட்டுனர்களால் ஆபத்து ஏற்படாது அல்லது மிதிவண்டி ஓட்டுனருக்கு ஆபத்து ஏற்படாது என்று போக்குவரத்து காவலர் கண்டுகொள்வதில்லையா? ஆபத்து ஏற்படுவதில்  மோட்டார் வாகன ஓட்டிகளிடம் காட்டும் எச்...